புதுடெல்லி:அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் கேரளாவை சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி சுரேஷ் நாயர் உள்பட நான்கு பேரை தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
இவர்களை கைது செய்ய போதிய தகவல்களை அளிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் நாயர், ரமேஷ் கோஹில், மஹத் பாயி,பாவேஷ்பட்டேல்ஆகியோர்தேடப்படும்குற்றவாளிகளாகஅறிவிக்கப்பட்டுள்ளனர். மஹத் பாயியைசுனில் ஜோஷி கொலை வழக்கிலும் என்.ஐ.ஏ தேடி வருகிறது.
2007 டிசம்பர் 29-ஆம் தேதி சுனில் ஜோஷி கொலை செய்யப்படும் முன்பு மஹத் பாயி சுனில்ஜோஷியுடன் தங்கியிருந்தான். பின்னர் அவன் தலைமறைவாகிவிட்டான். மூன்று நபர் கொல்லப்பட்டு17 பேருக்கு காயமேற்பட்ட அஜ்மீர் குண்டுவெடிப்பின் சதித்திட்டம் தீட்டியதிலிருந்து 2007அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிப்பு நிகழும் வரையிலானநடவடிக்கைகளில் நான்கு பேருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ வெளியிட்டநோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷியின்கட்டளைப்படி இவர்கள் அஜ்மீர் தர்காவில் குண்டைவைத்துள்ளனர்.குண்டுவெடிப்பிற்கு டைமராக உபயோகிக்க 11 சிம்கார்டுகளும், நான்கு நோக்கியாபோன்களும்
மேற்கண்ட நான்கு பேரும் சேர்ந்தே வாங்கியுள்ளனர். 2004 ஏப்ரல் மாதம் உஜ்ஜயினில் நடந்தகும்பமேளாவில் இந்த நான்கு பேரும் இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான அஸிமானந்தாவுடன்சந்திப்பை நடத்தினர் என என்.ஐ.ஏ கூறுகிறது. குஜராத் மாநிலம் கேதாமாவட்டத்தில்தாகோரில் சுரேஷ் நாயர் தங்கியிருந்தார் என என்.ஐ.ஏ முன்னர் கண்டறிந்தது.
குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் சுரேஷ் நாயர் தலைமறைவாக தங்கியுள்ளார் என தகவல்கிடைத்ததன் அடிப்படையில் இம்மாதம் முதல்வாரத்தில் என்.ஐ.ஏ புலனாய்வு குழு குஜராத்திற்குசென்று விசாரணை நடத்தியிருந்தது. சுரேஷ் நாயரின் தந்தை தாமோதரன் நாயரிடம் தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்தியிருந்தது