யூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்!

Posted: செப்ரெம்பர் 4, 2011 in POPULAR FRONT

இஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறது. அதற்கு என்னென்ன முயற்ச்சிகளை எடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது ஒரு பழைய நிகழ்ச்சி!

1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.

அப்போதய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் மொஸாத்தின் தலைவர் ஸிவி ஸமீரை அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்திருந்தார். ஜெர்மனியின் தாக்குதலால் அனைவரின் முகத்திலும் ஒரு இறுக்கம் தென்பட்டது. ‘பதிலடியாக நாம் என்ன செய்யப் போகிறோம்?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். ‘கடவுளின் கோபம்’ என்ற ஒற்றை வரியில் பதிலளித்தார் மொசாத்தின் தலைவர் ஸிவி ஸமீர்.

அது என்ன ‘கடவுளின் கோபம்?’ என்று பலரும் அவரிடம் கேட்டனர். ‘பல லட்சம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தீன போராளிகள் பிடித்துச் சென்றது நமக்கு தலைக்குனிவையும், அவர்களுக்கு மேலும் தைரியத்தையும் உண்டாக்கியுள்ளது. எனவே போராளிகளின் நம்பிக்கையை தகர்க்கும் விதமாக பாலஸ்தீன இயக்க தலைவர்களையும் முக்கிய வீரர்களையும் தீர்த்துக் கட்ட போடப்பட்ட திட்டத்தின் பெயர்தான் ‘கடவுளின் கோபம்’ என்ற ஆபரேஷன்’ என்றார் ஸிவி ஸமீர்.

படுகொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை அனைவரின் பார்வைக்கும் வைத்தார் ஸிவி ஸமீர். ஸிவி ஸமீர் கொடுத்த புகைப் படத்தில் 11 பேர்களை மட்டும் இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அந்த 11 பேரும் ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்கள் 11 பேர் இறக்க காரணமானவர்கள். 11க்கு 11 என்ற ரீதியில் கணக்கு தீர்க்க திட்டம் தயாரானது. ஆனால் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? எப்படி தீர்த்துக் கட்டப் பொகிறீர்கள்? அதற்கு எத்தனை காலம் தேவைப்படும்? என்றார் பிரதமர் கோல்டா மேயர்.

‘அவர்கள் எவ்வளவு காலத்திற்குள் படுகொலை செய்யப்படுவார்கள் என்ற உத்திரவாதத்தை என்னால் தர முடியாது. ஆனால் அவர்கள் கண்டிப்பாக கொல்லப் படுவார்கள்’ என்றார் ஸிவி ஸமீர். அவர் சொன்னது போல் இந்த திட்டத்தை செயல்படுத்த மொஸாத்துக்கு 20 வருடங்கள் பிடித்தது.

இவர்களின் திட்டத்தில் முதலில் பழி வாங்கப் பட இருந்தவர் கிறித்தவரான வாதி ஹத்தாத்.

யார் இந்த வாதி ஹத்தாத்?

1927 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனில் ஷஃபாத் என்னும் கிராமத்தில் பிறந்தார். மிகுந்த ஆச்சாரமிக்க கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்தவ குடும்பத்தில் பிறந்த வாதி ஹத்தாத் சிறு வயது முதலே மத சடங்குகளில் ஆர்வமுடையவராகவும் ஞாயிறு தோறும் தேவாலயத்துக்கு செல்பவராகவும் இருந்தார். ஷஃபாத் கிராமத்தைப் பொறுத்த வரையில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தனர். அமைதியான அவர்களின் வாழ்க்கையில் அரக்கர்களாக வந்தனர் இஸ்ரேலியர்கள்.

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு இஸ்ரேலிய போரில் பல பாலஸ்தீன கிராமங்கள் அழிக்கப்பட்டன. அதற்கு ஷஃபாத் கிராமமும் விதிவிலக்கல்ல. ஒரே இரவில் தங்களுடைய வீடுகளை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். சொந்த வீட்டையும் சொந்த நாட்டையும் விட்டு அகதிகளாக லெபனானில் தஞ்சம் புகந்ததில் ஹத்தாதின் குடும்பமும் ஒன்று.

லெபனானின் தலைநகரிலிருந்த பெய்ரூத் அமெரிக்கன் யுனிவர்சிடியில் பல மருத்துவப் பிரிவில் தேர்ச்சி பெற்று மருத்துவரானார். இது குறித்து பிந்தைய நாட்களில் ஹத்தாத் குறிப்பிடும்போது ‘அகதி என்ற பட்டத்துடனே மருத்துவர் என்ற பட்டமும் கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்றே கருதுகிறேன்’ என்றார். மருத்துவ படிப்பை முடித்து விட்டு தனது கல்லூரி தோழரான டாக்டர் ஹபாஸூடன் சேர்ந்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு கிளினிக் ஆரம்பித்தார். 1956 ஆம் ஆண்டு ஐ.நா வின் பாலஸ்தீனர்களின் புனர்வாழ்வுக்கான அமைப்புடன் இணைந்து அகதிகளுக்கான சேவையில் ஈடுபட்டார். அதே வேளையில் பாலஸ்தீன மீட்புக்காக ‘அரபு தேசிய இயக்கம்’ என்ற அமைப்பை தனது தோழரோடு சேர்ந்து ஆரம்பித்தார். பின்னாலில் இந்த இயக்கம் popular front for the liberation of palastine (pflp) என்ற பெயராக மாற்றப்பட்டது. 1967 லிருந்து 1977 வரை இவர் தலைமையில் பிஎஃப்எல்பி தொடுத்த தாக்குதல்களில் இஸ்ரேலே அரண்டு போனது. இந்த காலகட்டங்களில் இஸ்ரேலியர்கள் விமானத்தில் பயணிக்கவே பதறினர். ஏனெனில் 1930 க்கு பிறகு விமான கடத்தலை உலகுக்கு அறிமுகப்படுத்தியது யார் எனில் அது வாதி ஹத்தாதாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு அரண்டு போயிருந்த நேரத்தில்தான் ஜெர்மனியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் ஹத்தாத் முக்கிய காரணகர்த்தா என்ற விபரம் தெரிய வந்ததும் இவரை தீர்த்துக் கட்டுவதன் அவசியத்தை இஸ்ரேல் உணர ஆரம்பித்தது.

ஆபரேஷன் ‘கடவுளின் கோபம்’ திட்டத்தின் படி வாதி ஹத்தாதின் தற்போதய இருப்பிடத்தை கண்டறிய ஸிவி ஸமீர் உத்தரவிட்டார். வழமையான ரகசிய படுகொலையில் மொசாத் ஒரு நடை முறையைக் கடை பிடிக்கும். அதாவது கொலை செய்யப்பட வேண்டியவர் இஸ்ரேலுக்கு வெளியே இருந்தால் முதலில் அந்நாட்டிலுள்ள தனது கைக் கூலிகளை உஷார் படுத்தும். இதற்காகவே பல நாடுகளிலும் வாடகை உளவாளிகளை மொசாத் வைத்துள்ளது. நம் நாட்டிலும் இதுபோல் பல உளவாளிகளை (இந்துத்வவாதிகளை) மொசாத் நியமித்துள்ளது. இரண்டாவதாக கேஸ் ஆபீஸர் எனப்படும் பிரத்யேக உளவு அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் கொல்லப்பட வேண்டிய குறிப்பிட்ட நபரைக் குறித்து அனைத்து தகவல்களையும் திரட்டி மொசாத் தலைமைக்கு அனுப்பி விடுவார். மூன்றாவதாக கொலைத் திட்டத்தின் அசல் மாதிரியை இஸ்ரேலில் போலியாக உருவாக்கி பயிற்சி செய்வர். இதன் மூலம் திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் சாதக பாதகங்களை முன் கூட்டியே மதிப்பீடு செய்து திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

நான்காவதாக திட்டத்தை செயல்படுத்துவதற்க்கான தேதி குறிக்கப்பட்டு பிரதமருக்கு தெரிவிக்கப்படும். பிரதமர் தலையாட்டியவுடன் கேசரியா எனப்படும் ரகசிய கொலைக் குழு அனுப்பப்படும். இவர்கள் ஏற்கெனவே பயிற்சி பெற்றிருந்ததால் காரியத்தை கணக்கச்சிதமாக முடித்து விட்டு மாயமாய் மறைந்து விடுவர்.

மொசாத்தின் இந்த வழக்கமான பாணி வாதி ஹத்தாதின் விஷயத்திலும் பயன்படுத்தப்பட்டது. அதன்படி ஹத்தாதின் இருப்பிடம் குறித்து அறிவதற்க்காக பாலஸ்தீன ஆட்காட்டிகளை மொசாத் அணுகியது. இவர்கள் பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் மொசாத்துக்கு தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களிடமிருந்து கிடைத்த தகவல் அத்தகைய நம்பகமானதாக இல்லை. ஏனெனில் ஹத்தால் தாம் மொசாத்தால் கொல்லப்படுவோம் என்பதை தீர்மானித்து தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார்.

பல கோணங்களில் துப்பறிந்த மொசாத்துக்கு இறுதியாக ஒரு நம்பகமான தகவல் கிடைத்தது. அது பிஎஃப்எல்பி யிலிருந்து ஹத்தாதால் நீக்கப்பட்ட இலிச் ராமிரஸ் சான்செஸ் என்பவன் கொடுத்த நம்பகமான தகவல்தான் ஹத்தாதின் கதையை முடிக்க மொசாத்துக்கு உதவியாக இருந்தது. ஹத்தாத் ஒளிந்திருந்தது ஈராக்கில். அப்போது சதாம் ஹீசைன் மிலிட்டரி கமாண்டர் ஜெனரலாக இருந்தார்.

இலிச் ராமிரஸ் சான்செஸ் கொடுத்த தகவலின்படி ஹத்தாதை கொல்ல ஒரு புது டெக்னிக்கை மொசாத் கையாண்டது. அது என்னவென்றால் ஹத்தாதுக்கு ஒரு பழக்கம் இருந்தது. சிறியவர்கள் சாப்பிடும் சாக்லெட்டுகளை எப்போதும் விரும்பி சாப்பிடுவார். இதை மோப்பம் பிடித்த மொசாத் இவரைக் கொல்வதற்கு அந்த சாக்லெட்டுகளையே பயன்படுத்தியது. 1970 களில் உயர்தர சாக்லேட்டுகள் ஈராக்கில் கிடைப்பது அரிது. இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திய மொசாத் ஹத்தாதின் சமையல்காரனை தனது வலையில் வீழ்த்தியது.

சாக்லெட்டுக்கு பிரசித்திப் பெற்ற பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகளை சமையல்காரன் ஹத்தாதுக்கு கொடுக்க ஆரம்பித்தான். அதில் மிக மிக குறைந்த அளவில் உயிர்க் கொல்லி கிருமி தடவப்பட்டு ஆறு மாத காலம் யாருக்கும் சந்தேகம் வராமல் வழங்கப்பட்டது. அக்கிருமிகள் சிறிது சிறிதாக கல்லீரலைத் தாக்கி லுக்கிமியா நோயை ஏற்படுத்தி ஹத்தாதின் உயிரைக் காவு கொண்டது.

ஆனால் உலகுக்கு இவர் இயற்கையான மரணத்தை தழுவியதாகத்தான் நம்ப வைக்கப்பட்டது. ஏனெனில் ஈராக்கில் வைத்து கொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலின் மொசாத் காரணம் என்ற செய்தி வெளியானால் அது இஸ்ரேல் ஈராக் உறவை பாதிக்கும். சுற்றிலும் பல பகைகளை பெற்றிருக்கும் இஸ்ரேல் ஈராக்கையும் அந்த நேரத்தில் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

காலங்கள் உருண்டோடின. 2007 ஆம் ஆண்டு முன்னால் மொசாத் அதிகாரியும் ‘டைம்’ பத்திரிக்கையின் ஜெருசலம் நிருபருமான ஆரோன் கிளீன் எழுதிய Striking Back என்ற புத்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வாதி ஹத்தாதை மொசாத் படுகொலை செய்ய பயன் படுத்திய டெக்னிக்கை வெளிப்படுத்தினார். தாங்கள் நினைத்த ஒரு காரியத்தை நிறைவேற்ற எத்தனை வருடங்கள் ஆனாலும் பொறுமையாக காத்திருந்து திட்டமிட்டு தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவர் என்பதற்கு ஹத்தாதியின் மரணம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

நமது நாட்டிலும் இந்துத்வவாதிகள் மொசாத்தின் திட்டமிடல் படியே செயல்படுகின்றனர். அத்வானிக்கும் மொசாத்துக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே! மாலேகானிலிருந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வரை இவர்கள் நடத்திய அனைத்துக்கும் மூலம் மொசாத்திலிருந்து பெறப்பட்டவையே!

நமது மும்பை நகரத்தை தாக்கவும் எவ்வளவு கச்சிதமாக பிளான் பண்ணினார்கள். எங்கு பார்த்தாலும் இந்துத்வவாதிகள் கைது செய்யப்பட்ட நேரம். இதே நிலை நீடித்தால் மோடியின் கைகளுக்கும் விலங்கு வரும் என்ற நேரத்தில்தான் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானிய கசாப்புக்கும் அவனது கூட்டத்தாருக்கும் குடும்பத்தை காப்பாற்றுகிறோம் என்ற வாக்குறுதி தரப்பட்டது. போலி முல்லாக்களால் மத வெறியும் ஊட்டப்பட்டது. இந்தியாவுக்குள் நுழைய எத்தனையோ வழிகள் இருக்க மோடியின் குஜராத் கடல் மார்க்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடலில் ரோந்து வருபவர்களுக்கு பணமோ அல்லது ராம பக்தியோ மோடி குரூப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம்.

இதை சாக்காக வைத்து ஹேமந்த் கர்கரேயையும் போட்டுத் தள்ளியாகி விட்டது. இந்துத்வாவாதிகள் மேலேயோ அல்லது மொசாத்தின் மேலேயோ துளியும் சந்தேகம் வராமல் காரியம் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் முதற்கொண்டு அனைத்து வழக்குகளும் மந்த கதியை அடைந்தது. குற்றவாளிகள் நினைத்த காரியம் எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவேறியது. வழக்கம்போல் பாகிஸ்தானின் ஏதாவது ஒரு தீவிரவாத குரூப்பின் பெயரில் ஈமெயிலோ, ஒரு போன் காலோ போட்டு தங்களின் தேச பக்தியை இந்துத்வாவாதிகள் திறம்பட செயல்படுத்தி விட்டார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக