இயல்பான வாழ்க்கையை மிகவும் அற்புதமாக சினிமா வடிவத்தில் வழங்குவதில் ஈரானிய சினிமாவுக்கு இணை அவர்கள்மட்டுமே தான். போலியான, மனித வாழ்வில் சாத்தியமே இல்லாத கதைகளை சினிமா திரைக்கதைகளாக உருவாக்கி பார்வையாளர்களை மனநோயாளிகளாகவும், கற்பனை உலகில் வாழ்பவர்களாகவும் இன்றைய சினிமா மாற்றிக் கொண்டிருக்கிறது. சினிமா என்றாலே பலர் அதனை விரசம்,காமம்,போலிக்காதல்,போலி என்றே பலர் கருதுகின்றனர். ஆனால் ஈரானிய சினிமாக்களோ மக்களின் இயல்பு வாழ்க்கையை சினமாவாக மாற்றி மனிதர்களின் உணர்வுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இயல்பு வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இவ்வளவு அழகான திரைக்கதைகளை அமைக்க முடியுமா என்று எம்மை இத்திரைப்படங்கள் வியக்க வைக்கின்றன. அப்படியான இயல்பு வாழ்க்கையை அற்புதமாக படம்பிடித்துக் காட்டும் ஒரு திரைப்படத்தைப் பற்றி நாம் இங்கு பார்க்க போகிறோம்.
நான் மேற்கூறப்பட்டவாறான திரைப்படங்களில் ஒன்று தான் THE SONG OF SPARROW. மிகவும் அற்புதமான கதைக் கருவை கொண்ட அழகான திரைப்படம். திரைப்பட துறையில் பல சாதனைகள் செய்த ஈரானிய இயக்குனர் மாஜித் மஜீதியின் கைவண்ணத்திலான திரைப்படமே இது ஈரான் என்றாலே அணுஆயுதமும் பாலைவனமும் தான் பலரின் மனதில் தோன்றும் ஆனால் நீங்கள் இந்த திரைப்படத்தை பார்த்தால் இதில் காட்டப்படும் அழகிய கிராமம் தான் உங்களுக்குள் தோன்றும் அவ்வளவு அழகாக இயக்குனர் ஈரானின் ஒரு கிராமத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
Advertisements